டெல்லி: நாடாளுமன்ற மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.கள் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் “தமிழ் வாழ்க” என்ற கூறி பதவியேற்றுக்கொண்டார். தென்சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், வடசென்னை தொகுதி திமுக டாக்டர் கலாநிதி வீராசாமி, திருவள்ளுவர் தொகுதி ஜெயக்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.