×

அரசு பஸ் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் தங்கவயலில் தின பயணிகளுக்கு பாதிப்பு

தங்கவயல்: கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தங்கவயல்-பெங்களுரு தின பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.   கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். 6 வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிக்கு செல்ல முடியாமல் தின பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். நேற்று அதிகாலை வழக்கம் போல் நகரசபை பஸ் நிலையம் வந்த தின பயணிகள் அங்கு அரசு பஸ்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வேறு வழி இல்லாத பயணிகள் அங்கிருந்த தனியார் பஸ்களில் ₹110 பஸ் கட்டண சீட்டு வாங்கி பெங்களூரு சென்றனர். அரசு பஸ்கள் இல்லாததால் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாமல் கொரோனா தடுப்பு விதிமுறைகள் காற்றில் பறந்தன. மேலும் தங்கவயலில் இருந்து தமிழக ஊர்களான சென்னை, வேலூர், குடியாத்தம் ஆகியவற்றுக்கு தமிழ் நாடு மற்றும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் சென்று வந்தன. வேலை நிறுத்தம் காரணமாக கோலார்  உள்பட பல்வேறு ஊர்களுக்கும் செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். தங்க‌வயல் -பெங்களுரு பஸ் போக்குவரத்து காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்த ராபர்ட்சன் பேட்டை நகரசபை குவெம்பு பஸ் நிலையம் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக  தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கியதால் வெறிச்சோடி காணப்பட்டது….

The post அரசு பஸ் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் தங்கவயலில் தின பயணிகளுக்கு பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thangavyal ,Bengaluru ,Karnataka government ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்