சென்னை: குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாதவர் கையில் ஆட்சி சிக்கியுள்ளது’’ என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘பள்ளிகள் திறந்தும் 3, 4, 5ம் வகுப்பு பாடப்புத்தகங்களை அனுப்ப இயலாத கையாலாகாத அரசாக தமிழக அரசு உள்ளது. குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாதவர் கையில் ஆட்சி சிக்கி உள்ளது. இனிமேலாவது துரிதமாகச் செயல்பட்டு பாடப்புத்தகங்கள் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். செய்யுமா?’’ எனக்கூறியுள்ளார்.