×

வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகே அநாதையாக கிடந்த இன்ஸ்பெக்டரின் கைத்துப்பாக்கி

சென்னை: வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகே கேட்பாரற்று கிடந்த கை துப்பாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கொளத்தூர் தயாளு நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சற்குணம் (55). இவர் சென்னை துறைமுகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மீன் வாங்குவதற்காக வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகே சென்றார். அப்போது கீழே கைத்துப்பாக்கி ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த துப்பாக்கியை எடுத்த அவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில்  ஒப்படைத்து புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் துப்பாக்கியை வாங்கி கொண்டு வழக்குப்பதிவு செய்து எழும்பூர் கோர்ட்டில் ஒப்படைத்தார். இது குறித்து மேலும் விசாரணை நடத்தியதில், மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜவஹரின் துப்பாக்கி என தெரியவந்தது. துப்பாக்கி எப்படி இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : orphan ,orphanage ,railway gate ,Villivakkam , Inspector's pistol, orphaned, Villivakam railway gate
× RELATED சென்னையை அடுத்த வண்டலூர் ரயில்வே கேட்...