×

திருச்சி ஏர்போர்ட்டில் 37 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வந்த பயணிகள் ஆசனவாயில் கடத்தி வந்த 37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று  காலை சார்ஜாவிலிருந்து  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த முகமது ரபீக், முகம்மது ரிகா மற்றும் எஸ்பி பட்டினத்தைச் சேர்ந்த முகமது முஸ்தபா, முஹம்மது ஹஷீர் ஆகிய நான்கு பயணிகள் ஆசனவாயில் 37 லட்சம் மதிப்புள்ள 1,100 கிராம் எடை தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Trichy Airport , Gold worth, Rs 37 lakh seized, Trichy airport
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...