திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியாவைச் சேர்ந்த 54 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 மாதமாக சிறையில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்த 14 பேர் தங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி நேற்று இரவு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.