×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மருத்துவ மையம் அமைக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் மருத்துவ மையம் அமைக்கக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆம்புலன்ஸ்,மருத்துவ குழு, மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன என்று கோவில் நிர்வாகம் தரப்பு கூறியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் பதில் மனுவை ஏற்று வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.


Tags : Madurai Meenakshi Amman Temple Medical Center , Madurai, Meenakshi Amman Temple, Medical Center, Case
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை