பீகார்: வெயில் காரணமாக பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று பீகார் மாநிலம் கயாவில் சட்டப்பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாராத கட்டுமானப் பணிகள், கலை நிகழ்ச்சிகள் பொதுவெளியில் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பகல் 11 மணி முதல் மாலை 4 வரை ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும் மேற்கொள்ள தடை போடப்பட்டுள்ளது.