கோவை: கோவை செல்வபுரம் தனியார் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவிக்கு உடல்நலம் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார். சித்த வைத்தியர் குருநாதன் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குருநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.