×

பீகாரின் வெப்பம் காரணமாக 60 பேர் உயிரிழப்பு: இறந்தவர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

பாட்னா: வரலாறு காணாத வெப்பத்தால் தமிழகம் மட்டுமல்ல பல்வேறு வடமாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வாட்டி வதைக்கும் கடும் வெயிலால் பீகாரில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிட்ஸ்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும் உத்திரகாண்ட் மாநிலத்தை வியாபித்திருக்கும் கடும் வெப்பம் தார் சாலைகளை கூட உருக்கிவிடுவதாக இருக்கிறது. இதையடுத்து மண்டையை பிளக்கும் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் அம்மாநிலத்திலும் பலர் மரணம் அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து வறுத்தெடுக்கும் வெப்பம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மக்கள் பகல் நேரத்தில் நடமாட்டத்தை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.  மேலும் பீகாரின் பாட்னா, அவுரங்காபாத், கயா, நவாடா மாவட்டங்களில் வெப்பம் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பீகார் முதலமைச்சர் நித்திஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : deaths ,Bihar , Patna, Bihar, heat, 60 people, death, deceased family, 4 lakh, compensation, chief minister, directive
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு