நாமக்கல்: நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் பதவிக்கு பரமத்தி ராஜூ (எ) ராமசாமி, மதுரை சாத்தையா, முருகேசன் வெற்றி பெற்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தற்போதைய தலைவர் குமாரசாமி, செயலாளராக நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வாங்கிலி, பொருளாளராக தன்ராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.