×

தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடும் நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்?: ஸ்டாலின் கேள்வி

சென்னை: பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை முனைப்புடன் நிறைவேற்றுமாறு திமுக எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று திமுகவினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வது ஆறுதலாக உள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல், தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடும் நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட வேண்டிய அவலநிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் இதெற்கெல்லாம் உரிய பதில் இல்லை என ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : schools ,restaurants , Water, schools, restaurants, Stalin, question
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...