×

2025க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 5வது நிதிஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர், இந்தியாவை 2024-க்குள், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவதற்கான இலக்கு சவாலானது, ஆனால் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அடையக் கூடியது தான் எனக் கூறினார். அதேபோல, வருமானம், வேலைவாய்ப்பை உயர்த்த ஏற்றுமதி துறை முக்கியமானது, ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜல்சக்தி துறை அமைச்சகம் தண்ணீர் விவகாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க உதவும் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் ஆயுஷ்மான்பாரத் காப்பீடு திட்டத்தை அனைத்து மாநிலங்களும் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 2025க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறினார்.


Tags : Modi ,country ,TB , Tuberculosis, Eradication, Prime Minister Modi, Speech
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...