×

புளித்துப்போன மாவு தட்டிகேட்ட எழுத்தாளர் தாக்கப்பட்டார்

நாகர்கோயில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத் தில் பல்வேறு படைப்புகளை எழுதியுள்ள இவர், நான் கடவுள், அங்காடித்தெரு, கடல், 2.0, சர்கார் உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

வழக்கமாக மாவு வாங்கும் கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார்எழுத்தாளர் ஜெயமோகன். வீட்டுக்குப் போனவர் மாவு புளித்து போய் இருப்பதைப் பார்த்துவிட்டு கடைக்கு மீண்டும் கொண்டு போய் வாடிக்கையாளர் ஆக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கடைக்கார பெண்ணின் கணவர் ஜெயமோகனை தாக்கினார். இப்போது நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டது குறித்து போலீஸ் புகார் செய்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் கொடுத்த புகாரின்  வடசேரி காவல் நிலைய போலீசார், கடைக்காரர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : jeyamohan ,nagarcoil ,shop owner,police action
× RELATED தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8...