×

தண்ணீர் பிரச்சனைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் தவறு : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை : தண்ணீர் பிரச்சனைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் தவறு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சில பள்ளிகள் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வருகிறது என்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜூன் 17 முதல் ஆய்வுப்பணிகள் நடைபெறும் என்று கூறிய அவர், பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டுவந்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என்றார்.


Tags : schools ,holiday ,Minister Chengottiyan , Water, Problem, School Education, Minister, Senkottaiyan, Shortage
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை