×

வள்ளுவர் கோட்டம் அருகே நள்ளிரவில் போலீஸ்காரருக்கு அடி உதை: 4 பேர் கைது கார் பறிமுதல்

சென்னை: பாண்டிபஜார் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவலர் கார்த்திகேயன் (32) நேற்று முன்தினம் நள்ளிரவு வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கோடம்பாக்கம்  நெடுஞ்சாலை மற்றும் வள்ளுவர் கோட்டம் மேம்பாலம் அருகே, காரில் வந்த 4 பேர், சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த காவலர் கார்த்திகேயன், இங்கு நிற்க கூடாது  என்று கூறி அவர்களை அனுப்பினார்.ஆத்திரமடைந்த 4 பேரும் காவலரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். மேலும், காவலர் வைத்திருந்த லத்தியை பிடுங்கி சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் வலி தாங்க முடியாமல் காவலர் அலறி துடித்தார். அப்போது அவ்வழியாக வந்த போலீசார், 4 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர். அதில், சுலைமான் (32), கபார் (35), முகமது (32), முகமது  ரிஸ்வான் (34) என தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் மது போதையில் காவலரை தாக்கியது தெரியவந்தது. காவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து, 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.




Tags : Valluvar , midnight ,Valluvar Gotham, assaulting policeman
× RELATED திருக்குறளில் வேள்வி!