×

காவல் சிறார் மன்ற கட்டிடம் திறப்பு

பெரம்பூர்: புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரில் உள்ள காவல் சிறார் மன்ற கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை இடித்துவிட்டு, ₹30 லட்சத்தில் புதிய கட்டிடத்தை சிபிசிஎல் நிறுவனம் கட்டி  கொடுத்தது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. காவல்துறை வடக்கு கூடுதல் ஆணையர் தினகரன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: படிப்பு நேரம் போக வடசென்னை சிறுவர்கள் இந்த மன்றத்திற்கு வந்து கல்வி சார்ந்த விஷயங்களை பயன்படுத்தி கொள்ளலாம். சிறுவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாதவாறு  பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். அவர்களுடைய பழக்க வழக்கங்களை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Tags : Police Opening Building , Police, Children ,, opening , building
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...