லக்னோ: உத்தர பிரதேச த்தில் பல பகுதிகளில் கடந்த புதன்கிழமை புழுதி புயல் தாக்கியது. இடியுடன் கூடிய மழையும் பெய்தது. இதில், மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புழுதி புயல், மழையால் நடந்த பல்வேறு விபத்துகளில் சிக்கி 13 பேர் பலியாகினர். இதில், சித்தார்த் நகரில் 4 பேரும், டியோரியாவில் 3 பேரும், பல்லையில் 2 பேரும் பலியாகினர். அயோத்தி, லக்கிம்பூர் கீரி, குஷிநகர் மற்றும் சோன்பத்ரா ஆகிய ஊர்களில் தலா ஒருவர் இறந்தனர்.