×

செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாய்-சேய் பலி சுகாதாரத்துறை செயலாளர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் தாய்-குழந்தை பலியான விவகாரத்தில், சுகாதாரத்துறை செயலாளர், இயக்குனர் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி புதிய தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அகிலா (26). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடந்தது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.கடந்த 8ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருக்குறுங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை  பிறந்தது. சிறிது நேரத்தில் அகிலா இறந்தார். அடுத்து குழந்தையும் இறந்தது.

இதையடுத்து பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் அவர்கள் உடன்படவில்லை. இதற்கிடையே பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில்  அகிலா மற்றும் குழந்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் உடலை ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் மற்றும் குழந்தையின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்  அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.இச்சம்பவம் கடந்த வாரம் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இதை பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து சுகாதாரத்துறை செயலாளர், இயக்குனர் 4  வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.



Tags : Health Secretary ,nurses ,childbirth ,Human Rights Commission , Mother-child, childbirth, Health Secretary, Human Rights Commission
× RELATED தமிழகத்தில் தற்காலிகமாக பணியாற்றி...