×

நாசிக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தி தனியார் நிதி நிறுவனத்தில் முகமூடி கும்பல் கொள்ளை: ஆடிட்டர் பலி: 2 பேர் காயம்

நாசிக்: மகாராஷ்டிராவில் தனியார் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் புகுந்த முகமூடி ஆசாமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்த நகை, பணத்தை  கொள்ளையடித்துச் சென்றனர். இந்த தாக்குதலில் ஆடிட்டர் கொல்லப்பட்டார். 2 ஊழியர்கள் காயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் உந்த்வாடி என்ற இடத்தில் உள்ள சிட்டி சென்டரில் வணிக வளாகத்தில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு தங்க நகைகள் அடமானம் வைத்து பணம் கொடுக்கப்படுகிறது. நேற்றுக் காலை அலுவலக ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். சில வாடிக்கையாளர்களும் அலுவலகத்தில் இருந்தனர். காலை 10.45 மணியளவில் முகமூடி அணிந்த 4 பேர் அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்தனர். அவர்களை பார்த்ததும் அலுவலகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் முகமூடி கும்பலில் ஒருவன், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில், மூன்று தோட்டாக்கள் அலுவலக ஆடிட்டர் சஞ்சு சாமுவேல் மீது பாய்ந்தது. இதில் அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

துபாக்கிச்சூட்டில் அலுவலக ஊழியர்கள் ராஜூ தேஷ்பாண்டே, கைலாஷ் ஜெயின் ஆகியோர் காயமடைந்தனர். பின்னர், முகமூடி கும்பல் அலுவலகத்தில் இருந்த மற்றவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி நகை, பணத்தை அள்ளிக் கொண்டு  காரில் தப்பிச் சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2 ஊழியர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்த சஞ்சு சாமுவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அலுவலகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் நாசிக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Audit Officer ,Nashik , Nashik, gunfire, private financial institution, robbery, auditor kills
× RELATED ஆட்சிக்கு வந்தால் இந்தியா கூட்டணி...