×

ஜார்கண்டில் நக்சல் தாக்கி 5 போலீசார் பலி

கர்சவான்: ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவர்களை ஒடுக்குவதற்காக இங்கு அதிரடிப்படைகள் செயல்பட்டு வருகின்றன. நக்சல்கள் மீது இவை கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேபோல், நக்சல்களும் பாதுகாப்பு படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செரய்கேலா மாவட்டத்தில் உள்ள திருல்தி பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், அவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், 2 சப்-இன்ஸ்பெக்டர்களும், 3 கான்ஸ்டபிள்களும் கொல்லப்பட்டனர். பின்னர், நக்சல்கள் தப்பி விட்டனர். அந்த இடத்ைத சுற்றிவளைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Naxal ,Jharkhand , Jharkhand, Naxal, 5 policemen killed
× RELATED சட்டீஸ்கரில் நக்சல் சுட்டு கொலை