புதுடெல்லி: ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆளுனர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட திட்டங்கள், விவசாய மேம்பாடு, நக்சல் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.