கிர்கிஸ்தான் : கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இந்திய பிரதமர் மோடி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும், பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.