ராமநாதபுரம் : ராமநாதபுரம் மண்டபத்தில் மின்கேபில் சேதமடைந்ததால் நாளை பிற்பகல் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பண்டபத்தில் மின்வாரிய பணிக்காக பள்ளம் தோண்டிய போது ஒப்பந்ததாரர்கள் மின் கேபிளை சேதப்படுத்தினர். ராமேஸ்வரம் தீவுக்கு செல்ல வேண்டிய மின் கேபிள் சேதமடைந்ததால் நாளை பிற்பகல் வரை ராமேஸ்வரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.