×

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி: 100க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, அமமுகவில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் அதிமுகவில் மீண்டும் இணையும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்த வண்ணம் உள்ளன. 3 நாட்களுக்கு முன்னதாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இவர் முன்னாள் முதலவர் ஜெயலலிதா இறந்த பிறகு அமமுகவில் இணைந்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் சாத்தூர் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடந்த செவ்வாய்க்கிழமையன்று நேரில் சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், நெல்லை மாவட்ட புறநகர் பகுதியின் செயலாளர் பிரபாகர், இவர் முன்னாள் எம்.பியாக பதவி வகித்தவர். இவரது தலைமையில் தான், அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், மாணவர் அணியை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் இருந்தும் அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : election ,executives ,AIADMK , Amit executives, AIADMK, joined
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...