×

சட்டீஸ்கர் மாநிலம் தடோகி பகுதியில் பதுங்கியிருந்த 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

தடோகி: சட்டீஸ்கர் மாநிலம் தடோகி பகுதியில் பதுங்கியிருந்த 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ரிசர்வ் படை காவலர்கள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 2 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நக்சலைட்டுகளை ஒடுக்க தனிப்படை

சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரா, காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. ஆதலால் இங்கு அடிக்கடி போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நக்சலைட்டுகளை ஒடுக்குவது குறித்து அம்மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனிப்படை குழு அமைத்துள்ளது.

 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலம் கேன்கர் மாவட்டத்தில் உள்ள தடோகி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  Malepara மற்றும் Murnar ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் படை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் மீது ரிசர்வ் படை காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நக்சலைட்டுகளின் உடல்களை கைப்பற்றிய போலீசார், அவர்களின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்த 315 ரக ரைபிள் , 303 ரக ரைபிள் துப்பாக்கி ஒன்று மற்றும் 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ரிசர்வ் படை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Naxalites ,Chhattisgarh ,area ,Dangongi , Naxalites, shot dead, Chhattisgarh
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...