சென்னை: தெற்கு ரயில்வேயின் உத்தரவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மொழிப்போரை தூண்டும் வகையில் உள்ளது என்றும், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை தெற்கு ரயில்வே திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.