×

கூடங்குளம் அணுக்கழிவு மையத்தால் கதிர்வீச்சு அபாயம் இல்லை : கூடங்குளம் அணுமின் உலை நிர்வாகம் விளக்கம்

சென்னை : கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அணுமின் நிலையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அணுஉலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணு உலைகள் 1 மற்றும் 2ம் அலகுகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே அணு கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்றும் மற்ற அணு உலை கழிவுகள் இங்கு கொண்டு வரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமித்து வைக்கப்படும் அணுக் கழிவுகளில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும் அவற்றை எதிர் காலத்தில் மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை பின்பற்றி அணுக் கழிவு மையம் அமைய உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசுப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் அமைய உள்ளது போலவே இந்தியாவில் மேலும் 2 இடஙகளில் அணுக் கழிவு மையம் அமைய உள்ளதாக என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது செய்து வரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் அணுக்கழிவு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.


Tags : center ,Kudankulam ,nuclear power plant , Kudankulam, atomic, center, radiation
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...