×

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது அசாரூதினிடம் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கொச்சி: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது அசாரூதினிடம் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் முகமது அசாரூதின் உள்பட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன், சிம் கார்டு, லேப்டாப், வங்கி ஆவணஙகள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரிடம் தமிழக காவல்துறை கோவையில் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Mohammad Arafat ,arrests ,NIA ,Sri Lankan , Sri Lanka blasts, arrests, Mohammad Azharuddin, NIA
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...