பிஷ்கெக்: மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் மோடி ஈரான் அதிபர் ஹாசன் ருஹானியை சந்திக்க உள்ளார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒததுழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறி்த்து ஆலோசிக்கவுள்ளார்.முன்னதாக சீன அதிபர் ஜி-ஜிங்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆப்கான் அதிபர் ஆகியோரை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.