×

கடலில் விழுந்து உயிருக்கு போராடிய ராணுவ அதிகாரி எலிகாப்டர் மூலம் மீட்பு

கோவா: கோவாவின் தெற்கு பகுதியில் கடலில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம் ராணுவ அதிகாரியை கடலோர காவல் படையினர் எலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். திரைப்படகாட்சியை மிஞ்சும் இந்த சாகசம் வீடியோவில் பதிவாகியுள்ளது. கடல் கொந்தளிப்பது மழை  என இயற்கை இடர்களுக்கு நடுவே போராடி ராணுவ அதிகாரியை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

கடற்கரை பாறைகளில் நடந்த போது கால் இடறி அலைகளால் இழுத்து செல்லப்பட்ட ராணுவ அதிகாரி கடல் அலைகளுக்கு நடுவே உயிருக்கு போராடுவதை கண்ட பாதுகாப்பு படை வீரர்கள் கடலோரரை காவல் படைக்கு தகவல் தெரிவித்துள்ளன. இதையடுத்து கடலோரப்பட்டையின் எலிகாப்டர் வரவழைக்கப்பட்டு கடலில் தத்தளித்த அதிகாரியை 10 நிமிடங்களில் உயிருடன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட அதிகாரிக்கு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Army officer ,sea , Falls into the sea, fought for life, military officer, escort, rescue
× RELATED மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!!