×

அதிமுக கருத்துகளை தெரிவிக்க செய்தி தொடர்பாளர்களை தவிர வேறு யாரையும் பயன்படுத்த கூடாது: ஊடகங்களுக்கு அதிமுக கடிதம்

சென்னை: அதிமுக கருத்துகளை தெரிவிக்க கட்சியின் செய்தி தொடர்பாளர்களை தவிர வேறு யாரையும் பயன்படுத்தக்கூடாது என்று ஊடகங்களை அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் ஊடகம் மற்றும் பத்திரிகைகளுக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ கருத்துகளை தெரிவிப்பதற்காக அதிமுக செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இவர்களை தவிர மற்றவர்கள் அதிமுக சார்பில் கருத்துகளை ஊடகங்கள், பத்திரிகைகள் வழியாக தெரிவிப்பது முறையாக இருக்காது என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே அன்பு கூர்ந்து இனி அதிமுக பிரதிநிதிகள் என்றோ கட்சி பெயரை  வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு மீறுகின்றபட்சத்தில் அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கோ, செய்திகளுக்கோ அதிமுக எந்த வகையிலும்  பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இது சம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிேறாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : anyone ,AIADMK , Expressions , AIADMK, AIADMK letter,media
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...