×

ஸ்கூல் பீஸ் கட்டவும் பணமில்லை மகனை கொன்று தம்பதி தற்கொலை: நாகையில் பரிதாபம்

நாகை: நாகையில் கடன் தொல்லையாலும், ஸ்கூல் பீஸ் கட்டக்கூட பணம் இல்லாததாலும் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன், மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(45). நகை கடையில் நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (40). இவர்களது மகன் ஜெகதீசன் (11). தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். செந்தில்குமார் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையில் இருந்து வந்தார்.

சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கே வந்து பணத்தை கேட்டு சத்தம் போட்டு சென்றுள்ளனர். மகன் ஸ்கூல் பீஸ் செலுத்த கூட பணம் இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் நீண்ட நேரமாகியும் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதில் சந்தேகமடைந்து அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது, ஜெகதீசனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு செந்தில்குமார், லட்சுமி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து வீட்டில் இருந்த செந்தில்குமாரின் கடிதத்தை கைப்பற்றினர். அதில், தான் வாங்கிய கடனுக்காக தனது வண்டியை எடுத்து கொள்ளுங்கள் என்று செந்தில்குமார் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அது அவர் எழுதியதுதானா என போலீசார் விசாரிக்கின்றனர். வறுமையின் கொடுமையாலும், கடன் தொல்லையாலும் குடும்பமே தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் உடையில் மகன்:
செந்தில்குமாரின் மகன் ஜெகதீசன் தனக்கு போலீஸ் உடை வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுள்ளான். இதையடுத்து எதிர் வீட்டில் வசிப்பவர்களிடம் ரூ.1000 கடன் வாங்கி புதிய உடை வாங்கி கொடுத்துள்ளனர். இந்த புதிய உடையை அணிந்தபடியே ஜெகதீசன் தாயின் மடியில் இறந்து கிடந்ததை பார்த்து அப்பகுதியினர் கண் கலங்கினர்.

Tags : Kill and Make Money Sleeping Son , School Piece, No Money, Kill the Son, Couple, Suicide
× RELATED தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100...