×

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது மகன் சண்முகபாண்டியனின் 3வது படம் பூஜைக்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று வந்தார். பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. எனவே, வாய்ப்புள்ள இடங்களில் தேமுதிக சார்பில் லாரிகளில் குடிநீர் வழங்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலிலும் இனிவரும் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றார். தொடர்ந்து அதிமுகவில் பொதுசெயலாளர் மற்றும் ஒற்றை தலைமை பிரச்னை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுக உட்கட்சி பிரச்னையில் நாம் தலையிட கூடாது. தண்ணீரில் தன்னிறைவு பெறும் வகையில் காவிரி பிரச்னையில் உரிய தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் விஜயகாந்த் உடல் நிலை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, விஜயகாந்த் உடல் நலமாக இருக்கிறார். தற்போதும் அன்றாடம் அலுவலகம் சென்று பணிகளை கவனிக்கிறார் என தெரிவித்தார். பேட்டியின்போது, விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன், படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பூபாலன், தேமுதிக மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், நகர செயலாளர் சாட்சி சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : elections ,alliance ,AIADMK ,Premalatha Vijayakanth , In the local elections, AIADMK, coalition, Premalatha Vijayakanth
× RELATED மக்களவை தேர்தல்; அதிமுக கூட்டணியில்...