×

அண்ணாநகரில் இளம்பெண் மாயம் : கடத்தலா? போலீசார் விசாரணை

அண்ணாநகர்: அண்ணாநகரில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு விநாயகர் கோவில் கலைவாணர் காலனியை சேர்ந்தவர்  சிவகாமி (21).  இவர் அமைந்தகரையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றினார். கடந்த 10ம் தேதி அன்று காலை வேலைக்கு சென்ற சிவகாமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கம்பெனி மற்றும் உறவினர், தோழிகளின் வீடுகளுக்கு சென்று விசாரித்துள்ளனர். ஆனால் சிவகாமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதுபற்றி ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகாமியை தேடி வருகின்றனர். யாராவது அவரை கடத்தினார்களா, வேறு விஷயமா என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Tags : magician ,kidnapping ,Anna Nagar ,Police investigation , Annanagar, teenage magic, kidnapping, police investigation
× RELATED ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல்...