சேலம்: கடந்த 3 ஆண்டுகளில் விஷால் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம், நாடக நடிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை என சேலத்தில் நடிகர் ராதாரவி பேட்டியளித்தார். மேலும் நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனவும், இது தானாக வெளியே வரும் எனவும் கூறினார்.