புதுக்கோட்டை : புதுக்கோட்டை ஆளப்பிறந்தான் கிராமத்தில் சட்டவிரோத மணல் குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. அறந்தாங்கியைச் சேர்ந்த வக்கீல் முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.