சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை முதலமைச்சர் பழனிசாமிக்கும் ராமதாஸ் அனுப்பியுள்ளார்.