கோவை: மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றி ஆலோசித்தோம் என அமைச்சர் வேலுமணி கோவையில் பேட்டியளித்தார். மேலும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள் எனவும் கூறினார். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெறவே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தோம் எனவும், தமிழகத்திற்கு தேவையான குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் எனவும் கூறினார்.