சென்னை: சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கொருக்குப்பேட்டை அருகே தடம் புரண்டது. இந்த விபத்தில் 2 பெட்டிகள் கவிழ்ந்தன. ரயில்வே ஊழியர்கள் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.