×

சிறுமி உள்பட 2 பேருக்கு தொல்லை: 3 பேர் கைது

சென்னை: மேற்கு மாம்பலம் சைதாப்பேட்டை சாலையை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. கடந்த 8ம் தேதி அவரது தாய் வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டில் தங்கி உள்ள உறவினர் ராஜ் (எ) ராஜ்குமார் (55) மற்றும் கூடுவாஞ்சேரி கிருஷ்ணாபுரம் முத்தமிழ் தெருவை சேர்ந்த பாலா (எ) பாலகிருஷ்ணன் (45) ஆகியோர் சிறுமிக்கு தனித்தனியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுமிதனது தாயிடம் சொல்லி அழுதுள்ளார். புகாரின்பேரில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

செங்குன்றம்: செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. கடந்த 7ம் தேதி வீட்டில் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி (43) என்பவர் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பினார். அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் மறைந்திருந்த ஆரோக்கியசாமியை கைது செய்தனர்.

Tags : persons , The girl, 2 persons, harassment, 3 people, arrested
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது