×

நள்ளிரவில் தூங்கியவர்களிடம் வில்லங்கம் ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்காத 2 பேரின் மர்மஉறுப்பை கடித்து குதறிய சைக்கோ கைது: ஒரு வாலிபர் பலி; மற்றொருவர் சீரியஸ்

சென்னை: தூங்கிக் கொண்டிருந்தவர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தபோது அவர்கள் மறுத்ததால் அவர்களின் மர்மஉறுப்பை கடித்து துப்பிவிட்டு தப்பியோடிய சிவகங்கை வாலிபரை ேபாலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில்  காயமடைந்த ஒருவர் இறந்தார். மற்றொருவர் சீரியஸாக உள்ளார்.சென்னையில் கோடை காலத்தில் வீடுகளை திறந்து வைத்துவிட்டு வெளியே தூங்குவது வழக்கம். அதை பயன்படுத்தி திருடர்கள் வீட்டில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்  சென்னையில் வீடு மற்றும் கடைகளின் வெளியே தூங்க பலர் பயந்து அனல் காற்று வீசினாலும், மின்சாரம் இல்லை என்றாலும் கூட பெண்கள் தைரியமாக தூங்கினாலும், ஆண்கள் வெளியே தூங்க பயந்தனர். சென்னையில் சுற்றி வரும்  சைக்கோ ஒருவர் தூங்கும் திடகாத்திரமான ஆண்களை குறி வைத்து அவர்களின் மர்மஉறுப்பை கடித்து துப்பிவிட்டு ஓடிவிடுவதாக தகவல்கள் பரவியதே இதற்கு காரணம். பாலத்தின் அடியில் தூங்கிய இரண்டு பேரை இப்படி சைக்கோ  தாக்கியிருக்கிறான். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து மர்மஉறுப்பை கடித்து துப்பும் சைக்கோவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. புகார்கள் வந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இரண்டு சம்பவத்திலும் ஒருவரே சம்பந்தப்பட்டிருப்பது  தெரியவந்தது. இதையடுத்து அந்த சைக்கோ நபரை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவன் அதிகமாக செல்லும் பகுதியில் ஒருவரை படுக்க வைத்தனர். நள்ளிரவில் அந்தப்பக்கமாக வந்த நபர் வீட்டின் வெளியே படுத்திருந்த நபரை அணுகிய  போது அங்கு பதுங்கியிருந்த ேபாலீசார் அந்த நபரை பிடித்தனர். பிறகு அவனை தங்கள் பாணியில் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.இது குறித்து ேபாலீசார் கூறியதாவது:  மர்ம உறுப்பை ஏன் கடிக்கிறார் என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் சைக்கோ நபர் தூங்கிக் கொண்டிருந்த எங்களை எழுப்பி ஓரின சேர்க்கைக்கு அணுகினார்.  அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அவனை அடித்து துரத்திவிட்டு தூங்கினோம். அதன் பிறகு திடீரென அவன் எங்கள் மீது பாய்ந்து மர்ம உறுப்பை கடித்துவிட்டான். தூக்கத்தில் இருந்ததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை  என்று கூறினர். இதையடுத்து நாங்கள் அவன் ஓரின சேர்க்கையாளன் என்று முடிவு செய்தோம். அப்போது அசோக் என்பவர் சொன்ன தகவலின் அடிப்படையில்  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முனுசாமி என்ற நபரை போலீஸ் நிலையத்துக்கு  அழைத்து வந்து விசாரித்தோம். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டு பார்த்தோம். இரண்டும் ஒன்றாக இருந்தது. பின்னர் எங்கள் பாணியில் அவனிடம் விசாரித்தபோது, அவனை பற்றிய பகீர் தகவல்கள் வெளியானது.

 தூத்துக்குடி கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணபெருமாள்  (30). சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு இரும்பு கடையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி இரவு போதையில் ரெட்டேரி மேம்பாலம்  அடியில் தூங்கிவிட்டார். நன்றாக தூக்கத்தில் இருந்தபோது நள்ளிரவில், திடீரென  மர்ம நபர் ஒருவன் நாராயணன் மர்ம உறுப்பை கடித்து குதறிவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து அவரை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.  இதேபோல் கடந்த மாதம் 25ம் தேதி ரெட்டேரி மேம்பாலம் அருகில் போதையில் கொளத்தூரை சேர்ந்த அஸ்லாம் பாஷா தூங்கிக் கொண்டிருந்தார்.  நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவன் அஸ்லாம் பாஷாவின்  மர்மஉறுப்பை கடித்து  குதறிவிட்டு தப்பிவிட்டான். ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை அரசு ஸ்டான்லி  மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அஸ்லாம் பாஷா இறந்தார். இவர்கள் இருவரின் மர்மஉறுப்புகளை கடித்து  துப்பியதை முனுசாமி ஒப்புக் கொண்டான். முனுசாமி சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவன். பிஎஸ்சி பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியவன். திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். முனுசாமிக்கு 10ம் வகுப்பு  படிக்கும் போதிலிருந்து ஓரினச்சேர்க்கையில் விருப்பம் இருந்ததாம். மானாமதுரையில் பலரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட முனுசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை ஊரிலேயே விட்டுவிட்டு சென்னைக்கு வந்து  வில்லிவாக்கத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். ஒருவரை காயப்படுத்தியது, ஒருவரை கொலை செய்தது ஆகிய குற்றத்துக்காக முனுசாமியை போலீசார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில அடைந்துள்ளனர்.


Tags : men ,psychiatrist , midnight,cooperate ,young child,killed,Another
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்