×

அறநிலையத்துறையில் 23 உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் அதிரடி உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் 23 உதவி கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி கூறியிருப்பதாவது: கடலூர் உதவி ஆணையர் ரேணுகா தேவி காஞ்சிபுரம் உதவி ஆணையர், புதுக்கோட்டை உதவி ஆணையர் ரமேஷ் நாகப்பட்டினம் உதவி ஆணையர், கூடழலகர் கோயில் உதவி ஆணையர் அனிதா திண்டுக்கல் உதவி ஆணையர், நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் ஜோதிலட்சுமி நாமக்கல் உதவி ஆணையர், அங்காள பரமேஸ்வரி கோயில் உதவி ஆணையர் பிரகாஷ் தேக்கம்பட்டி வனப்பத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர், காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரமணி திருத்தணி முருகன் கோயில் உதவி ஆணையர், திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா சென்னை நகை சரிபார்ப்பு உதவி ஆணையர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் உதவி ஆணையர், விருதுநகர் உதவி ஆணையர் ஹரிஹரன் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உதவி ஆணையர், தர்மபுரி உதவி ஆணையர் நித்யா திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் உதவி ஆணையர், நாகநாதசுவாமி கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் உதவி ஆணையர், நாமக்கல் நரசிம்ம கோயில் உதவி ஆணையர் ரமேஷ் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உதவி ஆணையர், கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில் உதவி ஆணையர், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் பரமக்குடி உதவி ஆணையர், திருப்பூர் உதவி ஆணையர் ஹர்ஷினி தர்மபுரி உதவி ஆணையர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன் கடலூர் உதவி ஆணையர், திருத்தணி முருகன் கோயில் உதவி ஆணையர் வனிதா சென்னை உதவி ஆணையர் என 23 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களை பணியிட மாற்றம் செய்திருப்பதாக அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேல்மருவத்தூர் கோயிலில் ஆய்வுக்கு சென்ற உதவி ஆணையரும் மாற்றம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் இணை ஆணையர் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தனர். அப்போது ேகாயிலில் இருந்தவர்கள் அவர்களை ஆய்வு செய்ய விடமால் தடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உதவி ஆணையர் தலைமையிலான குழு திரும்பி சென்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரவே ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோயிலில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட வேலூர் மண்டல இணை ஆணையர் தனபால் சிவகங்கை மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், கோயிலில் ஆய்வு செய்த உதவி ஆணையர் ரமணியையும் பணியிட மாற்றம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Assistant Commissioners , Charity change, Assistant Commissioners, Workplace Change
× RELATED தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் பணி...