சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரசு பள்ளி ஆசிரியை ஈஸ்வரி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து ஆசிரியை ஈஸ்வரி சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.