×

மதுரையில் இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை: காதல் பிரச்சனையா? என சந்தேகம்

மதுரை: மதுரை தல்லாகுளத்தில் இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அஜித். இவர் ஒரு வழக்கு தொடர்பாக தனது சகோதரர் ரஞ்சித்துடன் தல்லாகுளம் காவல் நிலையத்தில் இன்று கையெழுத்திட இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்பு காவல் நிலையத்தை நெருங்கியபோது அவர்களை மரித்த மர்ம கும்பல் வாகனத்தில் இருந்த இருவரையும் கீழே தள்ளிவிட்டுள்ளது. மேலும் ரஞ்சித்தை விட்டு விட்டு அஜித்தை துரத்திய அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிடவே அந்த கும்பல் தப்பி சென்றது. மேலும் காவல் நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது.

அஜித்தின் உடலை மீட்ட போலீசார் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட அஜித் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவரும் அதேபகுதியை சேர்ந்த விக்கி என்பவரும் ஒரே பெண்ணை காதலித்ததாகவும் அந்த பெண்ணை அண்மையில் அஜித் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காதல் பிரச்சனையில் அஜித் தன்னை தாக்கியதாக கூறி தல்லாகுளம் காவல் நிலையத்தில் விக்கி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற அஜித் தான், தற்போது கையெழுத்திட சென்றபோது வெட்டி கொல்லப்பட்டுள்ளார். எனவே விக்கி உடனான  பிரச்சனையில் அஜித் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   


Tags : killing ,Madurai , Madurai, youth, mystery, run away, banish, slaughter, love problem, suspicion
× RELATED மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை...