×

ஒற்றைத் தலைமை சர்ச்சை: வழிகாட்டுதல் குழு அமைக்க அதிமுக திட்டம்

சென்னை: ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் இரு அணிகள் இணைந்தபோது, 15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ,துணை ஒருங்கிணைப்பாளர்கள் என 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.



Tags : AI ,Guidance Committee , Single Leadership Controversy: The AI plans to set up the Guidance Committee
× RELATED காரைக்கால் என்.ஐ.டியில் மருத்துவ...