கொல்கத்தா : கொல்கத்தாவில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முயன்ற பா.ஜ.க.வினர் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர். கொல்கத்தாவில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜகவினர் காவல் தலைமை அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். இந்நிலையில் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கொல்கத்தா போலீசார் கலைத்தனர்.