×

நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்... காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்கும் தின்பண்டங்களால் காத்திருக்கும் ஆபத்து

டெல்டா மாவட்ட பகுதிகளில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் பேக்கரி மற்றும் பெட்டி கடைகள் உள்ளன. இங்கு அதிகளவில் எண்ணெய் பொரித்த உணவான ஸ்னாக்ஸ் வகை தின்பண்டங்கள் அதிக அளவு விற்பனை செய்யப்படுவதால் இதனை குழந்தைகள் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். குழந்தைகளை கவரும் வண்ணம் ஸ்னாக்ஸ் பல்வேறு வண்ணங்களில் வித, விதமாக தாயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற ஸ்னாக்ஸ் வகைகள் பள்ளி வளாகத்தை குறி வைத்தே விற்பனை செய்யப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் வீட்டில் இருந்து பெற்றோர்களிடம் வாங்கிய காசுகளை ஸ்னாக்ஸ்சுக்காக செலவு செய்கின்றனர். நகரங்கள் மற்றும் கிராம ங்களில் குடிசை தொழிலாக முறுக்கு, மிக்சர், காரச்சேவு, காராப்பூந்தி, குழல் வடிவ நொறுக்கு தீனி உள்ளிட்ட ஸ்னாக்ஸ் வகைளை உற்பத்தி செய்து பிளாஸ்டிக் பாக் கெட்டுகளில் அடைத்து வினியோகம் செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான பாக்கெட்டுகளில் ஸ்னாக்ஸ் தாயாரிப்புக்கு பயன்படுத்திய மூல பொருட்கள், தயாரிப்பு தேதி, காலாவதி ஆகும் தேதி, தயாரிப்பவர் முகவரி கள் குறிப்பிடு வதில்லை. அதே நேரத்தில் ஒரு சில தயாரிப்பாளர்கள் ஸ்னாக்ஸ் தயாரிப்பு பற்றி விளக்கத்தை ஸ்னாக்ஸ் பாக்கெட்டுகளின் வெளியில் வைத்த தைத்துள்ளனர். காரணம் ஒரு வேலை குறிப்பிட்ட தேதிக்குள் பொருள் விற்பனையாக வில்லை என்றால் தயாரித்த தேதியை மாற்ற வாய்புள்ளது. இதனால் வினியோகஸ்தரிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் திண்பண்டங்கள் காலாவதியான பின்பும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஸ்னாக்ஸ் கலருக்காவும், மொருமொருப்பாக இருக்கவும் கலர் பொடிகள், சோடா பவுடர்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இது போன்ற ஸ்னாக்ஸ் வகை களை வாங்கி சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்புள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பெரும்பாலான குழந்தைகள் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குழந்தைகளின் எதிர்காலம் கருதி கடைகளில் தரமான ஸ்னாக்ஸ் வகைகள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமம் மற்றும் பள்ளியாக சென்று மாணவர்கள், பெற்றோர்களிடையே பொரித்த உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் ஏக்கமாக உள்ளது. இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ஸ்னாக்ஸ் எனும் நொறுக்கு தீனிகள் குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தமான நோய் களை ஏற்படுத்துகிறது. உதாரணமாக எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தை களுக்கு மலச்சிக்கலை உருவாக்குகிறது. இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை ஏற்பட்டு உடல் எடை குறையவோ, அதிகரிக்கவோ செய்யும். சிறு வயதில் மலச் சிக்கல் ஏற்பட்டால் அது வளரும் பருவத்தில் உடல் வளர்ச்சி, வயிறு உள்ளிட் டவைகளில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.

தற்போது சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்படைவதற்கு பொரித்த உணவுகள் ஒரு காரணமாக உள்ளது. எனவே பெற்றோர்கள் எண்ணெயில் பொரித்த உணவை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்த்து பழங்கள், வேக வைத்த உணவு உண்ண குழந்தைகளை பழக்கபடுத்த வேண்டும் என்றனர். பெற்றோர்கள் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிகள் அருகே வயதான பாட்டிகள் கடைகள் போட்டி பள்ளி மாணவர்களிடம் வியாபாரம் செய்தனர். அப்போது பனங்கிழங்கு, மா, பலா,சக்கரவள்ளி, மரவள்ளி உள்ளிட்ட கிழங்குகள் அவித்து விற்பனை செய்தனர். மேலும் கடலை மிட்டாய், கல்கோன உள்ளிட்ட சத்தான பொருட்கள் விற்பனை தற்போது அது தலைகீழா மாறியுள்ளது. குழந்தைகளுக்கு எதை வாங்கி கொடுப்பது என குழப்பமாக உள்ளது. இருந்த போதி லும் குழந்தைகள் நொறுக்கு தீனிகளையே அதிகம் விரும்புகின்றனர். குழந்தை களை மயக்கும் வகையில் கலர் கலராக தயாரித்து நொறுக்கு தீனிகளை விற்பனை செய்கி ன்றனர். இந்நிலையில் நொறுக்கு தீனி வாங்கி சாப்பிடாத என குழந்தைகளை கண்டி த்தாலும் பள்ளிகளில் பெற்றோர்களுக்கு தெரியாமல் வாங்கி உண்ணும் போது தடுக்க முடியவில்லை என்றனர்.

ஸ்னாக்ஸ் கலருக்காவும், மொருமொருப்பாக இருக்கவும் கலர் பொடிகள், சோடா பவுடர்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இது போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை வாங்கி சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

20ஆண்டுகளுக்கு முன் பள்ளிகள் அருகே வயதான பாட்டிகள் கடைகள் போட்டி பள்ளி மாணவர்களிடம் வியாபாரம் செய்தனர். அப்போது பனங்கிழங்கு, மா, பலா,சக்கரவள்ளி, மரவள்ளி உள்ளிட்ட கிழங்குகள் அவித்து விற்பனை செய்தனர்.

டெல்டா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தின்பண்டங்கள் விற்கப்பட்டு வருகிறது. ஆனால் இது பற்றி எதுவுமே தெரியாதது போல அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். பள்ளி மாணவர்களின் நலனை காப்பதில் அரசு, அரசு அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் இது எதை யும் அரசு அதிகாரிகள் கடை பிடிப்பது இல்லை. எனவே இனிமேலும் அதிகாரிகள் தூங்காமல் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர் கால சந்ததி யினரை ஓரளவுக்கு நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

Tags : expiration , Snacks, danger
× RELATED நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...