கோவை : கோவையில் உக்கடம் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் அசாருதீன், சதாம், அக்ரம் ஜிந்தா, அபூபக்கர் சித்திக் உட்பட 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.