×

காஞ்சி, தூத்துக்குடி எஸ்பி உள்பட தமிழக போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சிபிஐக்கு மாற்றம்

சென்னை:தமிழக போலீஸ் அதிகாரிகள் விருப்பம் இருந்தால் மத்திய அரசு பணிக்கு செல்ல சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல போலீஸ் அதிகாரிகள் மத்திய அரசின் வேலைகளில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி எஸ்பி முரளி ரம்பா, காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமணி, சிவில் சப்ளை எஸ்பி  சோனல்சந்திரா ஆகியோர் சிபிஐயில் பணியாற்ற தமிழக அரசு மூலம் விருப்பம் தெரிவித்தனர். இவர்களது விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதனால் அவர்கள் 3 பேரையும் சிபிஐ பணிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் அவர்கள் சிபிஐ பணியில் சேர உள்ளனர். அதேபோல, ஐஆர்எஸ் அதிகாரி வித்யூத் விகாஷூம் சிபிஐ பணிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Thoothukudi SP ,Kanchi ,CBI , Kanchi, Thoothukudi SP, Tamil Nadu police officers, 3 people, shifted to the CBI
× RELATED கருடன் கருணை